செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் இந்திரா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையானது ஆபத்தான நிலையில் சாலையில் இருந்து 1½ அடி அளவுக்கு மேல் தெரியும் படியாக அமைந்திருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை வழியே மோட்டார் சைக்கிளிலில் வரும் வாகன ஓட்டிகள் அதில் தட்டி கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் கார் போன்ற வாகனங்களும் அதில் இடித்துக் கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விபத்து எதுவும் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுப்பார்களா?