சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சி 3-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் திறந்த வெளியில் கழிவுநீர் செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களால் அவதி அடைகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாயை மேல் மூடியை போட்டு அமைத்துத்தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.