ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சந்தை பின்புறம் உள்ள மழைநீர் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த வாய்க்காலில் மழைநீர் செல்வதில்லை. சாலையில் தேங்குவதால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.