சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி வார்டு எண் 11-ல் மழைநீர் செல்ல வழி இல்லை. இதனால் மழை காலங்களில் சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்குகின்றது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் மழைநீர் வடிந்து செல்ல கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.