தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-19 13:29 GMT

விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் பைபாஸ் சாலையில் லேசாக மழை பெய்தால் கூட பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் சாலையில் வெளியேறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தேங்கிய கழிவுநீரில் பயணிப்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்