சென்னை மேற்கு மாம்பலம் தெற்கு கே.ஆர். கோவில் தெருவின் சாலையின் மையத்தில் பொறுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் சேம்பர், சாலையின் மட்டத்தில் இருந்து சுமார் ¾ அடி அளவில் கீழ் இறங்கி பள்ளமாக உள்ளது. இதனால் அந்த பாதையை கடக்கும் வயதானவர்கள் தடுமாறி விழுவதும், சாலையில் சைக்கிளில் சென்று விளையாடும் சிறுவர்கள் அந்த பள்ளத்தில் விழுந்து காயங்களுடன் செல்வதும் வாடிக்கையாகி வருகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சேம்பரை சாலை மட்டத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.