தஞ்சை மருத்துக்கல்லூரி சாலை பாலாஜி நகரில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி செல்கிறது. இந்த கழிவுநீர் சாலையோரத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் கழிவுநீரால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?