ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்

Update: 2022-08-04 14:03 GMT

திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதுடன், ஆற்றில் அதிக அளவில் ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் செல்ல பெரிதும் தடையாக உள்ளது. மேலும் ஆற்றில் இருபுறமும் கருவேல மரங்கள் முளைத்துள்ளதால் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாமல் மழைபெய்யும்போது அருகில் உள்ள ஊர்களுக்குள் வெள்ளநீர்புக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்