திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நஞ்சப்பா பள்ளி குழந்தைகள் செல்லும் பாதையான ஸ்டோர் எதிர்ப்புறம் உள்ள ரோட்டில் பல நாட்களாக கழிவுநீர் வெளியே வந்து கொண்டுள்ளது. இந்த பாதையில் செல்லும் பள்ளி குழந்தைகள் கழிவு நீரை தாண்டி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே சாலையில் கழிவு நீர்தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.