சென்னை ஆவடி, காமராஜ் நகர், கருமாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுக்குமா?