திறந்து கிடக்கும் கழிவுநீர் ஓடை

Update: 2022-08-01 12:22 GMT
கடையநல்லூர் நகராட்சி 17-வது வார்டு பூங்கா அருகே சேர்ந்தமரம் சாலையில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் ஓடை அடைப்பை சரி செய்வதற்காக திறக்கப்பட்டது. ஆனால் இந்த கழிவுநீர் ஓடை இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும் கழிவு நீர் ஓடையில் மேல் மூடி போடாமல் திறந்த நிலையில் உள்ளதால் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. ஆகவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்