சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2022-07-29 17:37 GMT

மதுரை மாவட்டம் அண்ணா பஸ் நிறுத்தம், சுப்புராமன் தெரு 34, 35-வது வார்டு பகுதியில் சாலையில் கழிவுநீர் கசிந்து வெளியேறி வருகிறது. ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் பிரதான வழித்தடம் என்பதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே பயணிக்கின்றனர். மேலும் அதிவேகத்தில் செல்லும் வாகனஓட்டிகள் தேங்கிய கழிவுநீரால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்