விருத்தாசலத்தில் சப்-கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள நுழைவு வாயில் பகுதி பள்ளமாக இருப்பதால் அங்கு மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுகொடுக்க செல்லும் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?