திருச்சியில் உள்ள இ.ஆர். மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள புதிய தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்ந்து போன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின் மழைபெய்யும்போது இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவுவதுடன் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.