அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் முழுவதும் சாலையில் செல்வதால் சாலையில் அரிப்பு ஏற்படுவதால், இரவு நேரங்களில் முதியவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.