வாருகால் வசதி வேண்டும்

Update: 2022-07-26 12:27 GMT

 விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கீழரத வீதியில் சாலையின் இருபக்கமும் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்படாமல் உள்ளது. இதனால் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதி முழுவதும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்