மேற்கு தாம்பரம் சிவ சண்முகம் தெரு, குடிநீர் தொட்டி எதிரே இருக்கும் கழிவுநீர் வடிகால்வாய்களில் மூடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் இருக்கின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட வடிகால்வாயில் இது போன்ற நிலை தொடர்கின்றது. இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அபாயம் விளைவிக்கும் நிலையில் இருக்கும் இது போன்ற கழிவுநீர் வடிகால்வாய்களின் மூடிகளை, முன்எச்சரிகையாக சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.