தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-09-17 08:08 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தோவாளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் ஓடை முறையாக பாராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், ஓடையில் கழிவுகள் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை முறையாக தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், நாகர்கோவில்.

மேலும் செய்திகள்