வாய்க்கால் பாலம் அமைக்கப்படுமா?

Update: 2023-08-30 11:23 GMT

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமம், அண்ணா நகர் வடக்கு தெருவிற்கும், பிரதான தெருவிற்கும் இடையே சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்காலை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் சிறிய அளவிலான குழாய் அமைத்து பாலம் போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திருவிழாவின்போது இந்த குழாயை அகற்றிவிட்டனர். இதனால் இந்த தெருவின் உள்ளே முதியவர்கள் மற்றும் பெண்கள் இந்த கழிவுநீர் வாய்க்காலை கடந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவுநீர் வாய்க்கால் திறந்து கிடப்பதினால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்