நோய் தொற்று அபாயம்

Update: 2023-08-27 14:11 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி கழிவுநீர் வாய்க்காலில் துப்புரவு பணியாளர்கள் கையுறை, காலுறை, முக கவசம் அணியாமல் சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி தூய்மை பணி மேற்கொள்கின்றனர். இதனால் அவர்களின் கால்களில் கண்ணாடி ஓடுகள், முட்கள் குத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்