சேலம் 12-வது வார்டு அபிராமி கார்டன் 4-வது தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கால்வாயை சீரமைத்து கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபால், சேலம்.