சென்னை பெருங்குடி, பர்மா காலனி முதல் மெயின் ரோட்டில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கழிவுநீர் ஆறு போல தேங்கி கிடக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் சாலை குண்டும் குழியுமாக, சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் யாரும் நடந்து செல்ல முடியவில்லை. கொசுத் தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே, சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.