தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-23 15:33 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ஆதனூர் ஊராட்சி, கீரீப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடி முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்