சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-07-23 14:35 GMT

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சொக்கம்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு நேரு தெருவில் வாறுகால் சரியாக பராமரிக்கப்படாததால், அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுகிறது. இதனால் பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வாறுகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்