சுகாதார சீர்கேடு

Update: 2023-05-24 16:22 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள உப்பிலியபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் 2 கட்டிடங்கள் 30 படுக்கைகளுடன், தினசரி சுமார் 300 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இங்கு வெளிநோயாளிகளுக்காக 2 கழிவறைகள் மற்றும் குறைந்த கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளதால் சுகாதாரக்கேடு உண்டாகிறது. வெளிநோயாளிகளுக்கென தனியாக கழிவறைகள் பார்வையில் தென்படும்படி தனி வளாகத்தில் கட்டி, அதிக கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்