கடலூர் முதுநகர் காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே கால்வாயை தூர்வாருவது அவசியம்.