தஞ்சை மேலவீதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் கழிவுநீர் சென்றதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், சாலையில் மூக்கை கைகளால் மூடியபடி சென்று வந்தனர். அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?