கடலூர் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. இருப்பினும் பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி, முழுமையாக முடிக்க வேண்டும்.