அந்தியூர் ஒன்றியம் பச்சாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி கணபதி நகா். இங்கு சாியான சாக்கடை வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. தெருவிளக்கு இல்லாததால் இங்குள் வீதியில் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி கணபதி நகரில் சாக்கடை வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.