நோய் பரவ வாய்ப்பு

Update: 2023-04-19 14:29 GMT

சத்தியமங்கலம் குத்தியாலத்தூர் அருகே பெரியஉள்ளேபாளையத்தில் சில வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆழ்துளை கிணறு அருகே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். நோய் பரவ வாய்ப்பு உள்ளது. நடைபாதை இடத்தில் கழிவு நீர் விடுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்