ஓடையை ஆக்கிரமித்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2023-04-16 11:53 GMT

திருப்பூர் சங்கிலிப்பள்ளம் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஓடையின் அருகே குடியிருப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஓடையினுள் வீசி வருகின்றனர். இதனால் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கழிவுநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையை தூர்வாரி சீரமைத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மீண்டும் கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


---------

மேலும் செய்திகள்