நீரோடை தூர்வாரப்படுமா?

Update: 2023-04-09 07:11 GMT

பொள்ளாச்சி தாலுகா ஊஞ்சவேலாம்பட்டி கிராமம் மின்நகர் பகுதியில் நீரோடை ஒன்று செல்கிறது. கடந்த காலங்களில் இந்த நீரோடையில் மழைநீர் மட்டுமே சென்று வந்தது. தற்போது ஓடையில் கழிவுநீரை விடுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு சாக்கடை கால்வாய் போன்று மாறிவிட்டது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர புதர் செடிகளும் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் நீரோடையே தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. எனவே அந்த நீரோடையை தூர்வாரி கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்