பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2023-04-05 13:44 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊரகத்துறை சார்பில் 2020-21 திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பச்சபெருமாள்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பின்னர் மின் இணைப்பு, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்