கடலூர் கேசவநகரில் கழிவுநீர் கால்வாய் சிமெண்டு சிலாப் அமைத்து மூடப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் குப்பைகள் விழுந்து கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், முதியவர்கள் யவரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாயை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?