ஆள்இறங்கு குழிகள் சேதம்

Update: 2023-03-26 10:18 GMT

பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இங்கு டி.கோட்டாம்பட்டி, மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆள்இறங்கு குழிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும் வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளதால் கழிவுநீர் அந்த குழிகள் வழியாக வெளியேறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆள்இறங்கு குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்