கால்வாயில் அடைப்பு

Update: 2023-03-19 09:38 GMT

பொள்ளாச்சி நகராட்சி 8-வது வார்டு அண்ணா நகர் 3-வது வீதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால், அருகில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்