தொற்றுநோய் அபாயம்

Update: 2023-03-19 09:16 GMT

எறும்புக்காடு பகுதியில் அரசமரம் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் தெருவில் இருந்து அனந்தநாடார்குடிக்கு செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஓடை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் வடிந்தோடி வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை முறையாக பராமரித்து கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுயம்புலிங்கம், எறும்புக்காடு.

மேலும் செய்திகள்