ஆக்கிரமிப்பின் பிடியில் கழிவுநீர் கால்வாய்

Update: 2023-03-05 15:52 GMT

நத்தம் தாலுகா குட்டுப்பட்டி ஊராட்சி தெற்கு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லாமல் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை சேறும், சகதியுமாக மாறியதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்