சாக்கடை கால்வாயில் அடைப்பு

Update: 2023-02-08 17:16 GMT

போடி நகராட்சி 16-வது வார்டு பகுதியான மேலராஜ வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளன. அதனை முறையாக அகற்றாததால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்