கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2023-01-29 11:53 GMT

திருச்சி மாவட்டம், அரியமங்கலம், காமராஜ் நகர், நெடுஞ்செழியன் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்