சாக்கடை கால்வாய் தேவை

Update: 2023-01-25 09:42 GMT

சேலம் மாநகராட்சி  15 -வது வார்டு பெரிய புதூர், பாரக்காடு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேல் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. அங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாக்கடை கால்வாய் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் பணியை முடித்து தர வேண்டும்.

-உமாமகேஸ்வரி, சேலம்.

மேலும் செய்திகள்