தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-01-08 12:28 GMT
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் சாக்கடை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. அருகிலுள்ள தெருக்களில் இருந்து கழிவுநீர் வாய்க்கால் மூலம் வெளியாகும் கழிவுநீர் பள்ளியில் சுற்றுச்சுவர் அருகிலேயே தேங்கி கிடக்கிறது. அங்கிருந்து கழிவுநீர் வெளியேறி செல்வதற்கு சரியான வாய்க்கால் வசதி இல்லை. எனவே அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீர் பள்ளி மாணவர்களை பாதிக்கும் வகையில் துர்நாற்றம் வீசி வருகிறது. அதில் உற்பத்தியாகும் பல்வேறு நோய்களைப் பரப்பும் கொசுக்கள் பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளை கடிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து கழிவுநீரை அப்புறப்படுத்த மற்றும் அங்கு கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்