சுகாதார சீர்கேடு

Update: 2023-01-01 15:23 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே முத்துப்பேட்டை சாலையும், ராஜாமடம் வாய்க்காலும் சந்திக்கும் இடம் உள்ளது. இந்த இடத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி கடந்து செல்கின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றவும், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்