வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீர்

Update: 2022-12-18 12:14 GMT
செங்கோட்டை தாலுகா கற்குடி கிராமத்தில் வாறுகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால், வீடுகளின் அருகில் கழிவுநீர் குளம் போன்று தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அமைக்கும் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்