சுகாதார சீர்கேடு

Update: 2022-12-18 10:50 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். சாலை பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்