சேறும், சகதியுமான குடியிருப்பு பகுதிகள்

Update: 2022-12-14 11:19 GMT

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மத்தூர் கிராமம் பகுதியில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள் இல்லாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக குடியிருப்பு பகுதிகள் காட்சி அளிக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து பொதுமக்கள் பல நோய்களுக்கு ஆளாகி  வருகின்றனர். அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க விரைவில் முன் வரணே்டும்.

மேலும் செய்திகள்