தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-11 18:45 GMT

அந்தியூர் அருகே சின்னதம்பிபாளையம் ஊராட்சி தாசரியூர் காலனி பகுதியில் உள்ள சாக்கடை வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி அந்த பகுதியில் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் நிற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்