வீடுகளுக்குள் ெசல்லும் கழிவுநீரால் அவதி

Update: 2022-12-07 16:53 GMT
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள செங்காட்டுப்பட்டியில் இருந்து பூனாட்சி செல்லும் சாலையிலுள்ள செட்டிப்பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் பாதை அடைக்கப்பட்டுள்ளது. அதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்ைகயும் எடுக்க வில்ைல. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்