தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-11-30 13:49 GMT

மதுரை மாநகராட்சி 54 வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி சாலைகளை பயன்படுத்த முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரி தொற்றுநோய் பரவுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்