விருத்தாசலம் புதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே உள்ள வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீரில் பன்றிகள் உருண்டு புரண்டு எழுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.